
புதிய ஆட்சி மாற்றத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. இதுவொரு சட்டவிரோதமான செயற்பாடு என்றநிலைப்பாட்டிலேயே நாங்கள் தொடர்ந்தும் இருந்துவருகிறோம். மஹிந்த ராஜபக்ஷவின்அரசாங்கத்துக்கு ஆதரவளிப்பது என்பது எமக்குபாதிப்பையே ஏற்படுத்தும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம்காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
நேற்று புதன்கிழமை (07) இரவு கட்சியின் அனைத்துபாராளுமன்ற உறுப்பினர்களுடனும் உம்ராகடமையை நிறைவேற்ற, புனித மக்காவை நோக்கிபுறப்பட்டுச் செல்ல முன்னர் பண்டாரநாயக்கசர்வதேச விமான நிலையத்தில் வைத்துஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்தார்



No comments
Post a Comment