ராஜித்தவுக்கு எதிராக ஜனாதிபதியிடம் மகஜர் மைத்ரி அரசு அதிரடி முடிவு ..??



முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரட்னவிற்கு எதிராக, ஊவா மாகாண அரச வைத்தியர் சங்கத்தினர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு மகஜரொன்றை சமர்ப்பித்துள்ளனர்.

இம் மகஜரில், ஊவா மாகாணத்தின் 527 வைத்தியர்களும் கையொப்பமிட்டுள்ளனர். ஒருபெண் வைத்தியர் மட்டும் பிரசவ விடுமுறையில் இருப்பதால்,அவர் மகஜரில் கையொப்பமிடவில்லையென்று, ஊவா அரச வைத்தியர் சங்க செயலாளர் டாக்டர் பாலித்த ராஜபக்சதெரிவித்தார்.

முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித்தசேனாரட்ன தமது கடமை காலத்தில், ஊவா அரச வைத்தியர்கள் மீது மேற்கொண்ட பலிவாங்கல்களை ஆட்சேபித்து, மேற்படி மகஜர் தயாரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
Share This
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்