சபாநாயகருக்கு எச்சரிக்கை விடுத்துள்ள கெஹலிய ரம்புக்வெல்ல! ரணில் தரப்பு அதிர்ச்சியில்..


எதிர்வரும் ஏழாம் திகதி நாடாளுமன்ற கூட்டத்தொடரை கூட்டுவதற்கு சபாநாயகர் முயற்சித்தால் அவருக்கு எதிராக அரசியல் அமைப்பு ரீதியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அரசாங்க தரப்பில் இருந்து கருத்து வெளியிடப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல எமது செய்திச் சேவைக்கு இதனை தெரிவித்தார்.

எதிர்வரும் 16 ஆம் திகதி நாடாளுமன்றத்தை கூட்டுவதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ள நிலையில், சபாநாயகர் அதற்கு எதிராக செயற்படுவது சட்டவிரோதமானதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, சட்டவிரோதமான முறையில் நாடாளுமன்றத்தை கூட்டினால் அதற்கு உதவும் அதிகாரிகளுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கெஹலிய ரம்புக்வெல எச்சரிக்கை விடுத்துள்ளார்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
Share This
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்