ஜப்பான் கடல் பகுதியில் ஒரு முழு தீவு மாயம் பரபரப்பு தகவல்.


ஜப்பான் கடற்பகுதியில் இசாம்பே ஹனகிட்ட கொஜிமா என்ற தீவு மாயமாகியுள்ளது. ஜப்பான் நாடு அடிக்கடி பூகம்பங்கள், சுனாமி போன்ற இயற்கை சீற்றத்தினால் பாதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தற்போது அதன் அடுத்தக்கட்டமாக அங்குள்ள தீவு பகுதி ஒன்று காணாமலே போயுள்ளது. இந்த தீவு பெயர் இசாம்பே ஹனகிட்ட கொஜிமா. இது சரியாக வடஜப்பானில் உள்ள ஹொக்கய்டோ என்ற தீவிலிருந்து காண முடியும். கடந்த 1987ம் ஆண்டு இசாம்பே தீவு கண்டுபிடிக்கப்பட்டது.

அண்மையில் கிடைத்த தகவலின்படி, இசாம்பே தீவு கடல் மட்டத்திலிருந்து சுமார் 1.4 மீட்டர் உயரத்திற்கு வெளியே தெரிந்தது. இந்நிலையில், தற்போது எந்த பகுதியில் இருந்து பார்த்தாலும், இசாம்பே தீவு தெரியவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அந்நாட்டு அரசாங்கம், இசாம்பே தீவு கடலில் மூழ்கியுள்ளதா என்றும், தீவு காணமல் போனதற்கான காரணம் குறித்தும் விசாரித்து வருகிறது.

இசாம்பே தீவில் மனிதர்கள் இல்லை என்றும் கூறப்படுகிறது. இருந்தபோதிலும், இந்த தீவில் அதிகப்படியான கனிம வளங்களும் உள்ளன. இது ஜப்பான் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் ஒரு சின்னமாக இருந்து வந்த நிலையில், தற்போது பூகம்ப விளைவால், தீவு மூழ்கியிருக்கக் கூடும் என்றும் கருதுகின்றனர். இதற்கு முன்னதாக கடந்த 2015ம் ஆண்டு ஹொக்கடியோ என்ற தீவுப்பகுதியில், 3000 மீட்டர் பரப்பளவுள்ள நிலத்தொகுதி பூகம்பத்தால் வெளி உலகத்துக்கு தெரியவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
Share This
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்