சபா நாயகருடனான இன்றைய கூட்டத்தில் கூட்டமைப்பு கலந்து கொண்டமை ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிப்பதற்கானது அல்ல என தெரிவித்திருக்கும் சுமந்திரன் யாருக்கு ஆதரவு என்பது தொடர்பில் தாம் இன்னும் முடிவுக்கு வரவில்லை என்றும் கூறியுள்ளார்.
118 நாடளுமன்ற உறுப்பினர்களுடன் பாராளுமன்ற கட்டடத்தொகுதிக்குள் நடந்த விசேட கூட்டத்தின்பின்னர் பி.பி.சி செய்திச் சேவைக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
மேலும் ஜனாதிபதி சட்டவிரோதமான முறையில் செயற்பட்டுள்ளதாக சுமந்திரன் மேலும் கூறியுள்ளார்.
இந்த நிலையில் சபாநாயகர் நாடாளுமன்றத்தை உடனடியாகக் கூட்டவேண்டும் என தாம் வலியுறுத்தியுள்ளதாகவும் சுமந்திரன் மேலும் குறிப்பிட்டார்.



No comments
Post a Comment